சனி, 31 டிசம்பர், 2016

இது ஹிந்து தேசம், 6 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார். ...இன்று பகவான் #ரமண_மகரிஷி பிறந்த தினம்(டிசம்பர் 30, 1879 - ஏப்ரல் 14, 1950) ..அவரது வாழ்க்கை வரலாறு உங்களுக்காக.....
அருப்புக்கோட்டை நகரின் அருகிலுள்ள திருச்சுழியில் 1879-ம் ஆண்டு பகவான் ரமணர் பிறந்தார்.
ரமணரின் சிறு வயதிலேயே தந்தை சுந்தரம் ஐயர் காலமானார், தாயார் அழகம்மை அரவணைப்பில் வளர்ந்த ரமணர் பள்ளி வயதுவரை சராசரி மாணவராகவே இருந்தார்.
விளையாட்டும் நீச்சலுமே அவரது பொழுதுபோக்கு.
தனது 16-ம் வயதில் 1895-ல் அவரின் வீட்டிற்கு வந்த விருந்தினர் “அருணாசலத்திலிருந்து வருகிறேன்” என்று சொன்ன வார்த்தை அவரைப் பரவசப்படுத்தியது.
திருவண்ணாமலைதான் அருணாசலம் என்பதை அவர்மூலம் உணர்ந்தார்.
அதுமுதல் அவரது உள்ளத்தில் ஒரு புதிய கிளர்ச்சி ஏற்பட்டது.
பின்பு ஒரு சமயம் மரண பயம் அவரை ஆட்கொண்டது. அந்த அனுபவத்தைத் தானே உணர ஒரு பிணம்போலப் படுத்தார், அவருள் ஏற்பட்ட உள்ளுணர்வு அவருக்கு இறப்பின் ரகசியத்தையும் இறப்பிற்குப் பின் என்ன என்பதையும் விளக்கியது.
“அழிவற்று அண்டமெங்கும் நிறைந்திருக்கும் ஆன்மஜோதியோடு ஒன்றியவன் நான்” என்ற அறிவு புலப்பட்டது.
1896, ஆகஸ்ட் 29-ல் இவரது ஞானத்தின் வாசலைத் திறந்தது.
அண்ணனுக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு அண்ணாமலைக்குப் புறப்பட்டார்.
“நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவரது உத்தரவுப்படி கிளம்புகிறேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்திருக்கிறது. இதற்காக ஒருவரும் விசனப்பட வேண்டாம். ‘இதை'த்தேடி காசு, பணம் செலவு செய்ய வேண்டாம்...” என்று எழுதி கீழே தனது பெயரைக் குறிப்பிடாமல் கோடு போட்டுவைத்தார்.
‘தகப்பனார்' என ஈசனையும், ‘இது' என அஃறிணையில் தன்னையும் குறிப்பிட்டார்.
ஆணவம் அழிந்த ஆத்மாவாக வெளிப்பட்டு, தான் ஞானம் அடைந்துவிட்டதை உணர்த்தினார்.
1896 செப்டம்பர் முதல் நாள் ரமணரின் அருள்பாதம் அண்ணாமலை என்னும், அருணாசலத்தில் அடி வைத்தது.
நேராகக் கோவிலுக்குள் நடந்தார். “அப்பா, நான் வந்துவிட்டேன்” என்றுகூறி அண்ணாமலையார் முன் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
அவரது பிரயாணம் அன்றோடு நிறைவுபெற்றது. அதற்குப்பிறகு தன் ஸ்தூல சரீரத்துடன் வேறு எங்குமே சென்றதில்லை.
ரமணரின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது.
ரமண பகவானின் ‘நான் யார்' என்ற தன்னையறியும் தத்துவ விளக்கம் அனைவரையும் கவர்ந்தது.
‘‘நான் என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே ஒடுங்கும், அதுவே தவம்!” என்பது போன்று விளக்கங்கள் அருளினார்.
ரமண மகரிஷி காலத்தில் அவரைக் கண்டோர் அடைந்த ஆனந்தத்திற்கும், துன்பங்கள் நீங்கி அமைதியடைந்த மக்களின் சுகத்திற்கும் அளவில்லை.
ரமணர் தனது ஆற்றலை வெளிப்படையாக யாருக்கும் காட்டுவதில்லை. பயன் அடைந்தோர் அவரிடம் நன்றி கூறினாலும் அதை அவர் ஏற்பதில்லை.
மௌனமே அவரது ஆசீர்வாதம். மௌனமே அவரது பேச்சு. அதில் நாம் மூழ்க மனமோ சுகமாகும்.
பகவான் ரமணர் தனது தாயாரின் மறைவின்போது அவரின் தலையிலும் மார்பிலும் தனது இரு கைகளையும் வைத்து முக்தி அடையச்செய்தார்.
அது மட்டுமல்ல, தாயாரின் சமாதியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து கோவிலும் கட்டினார், அதை தியான பூமியாக்கினார். ஒவ்வொரு நாளும் பலரும் அங்கமர்ந்து அன்பின் அருளொளியைப் பெறுகின்றனர்.
ரமணரை இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்சியர்கள் என பல்வேறு மதத்தவரும் சென்று வழிபடுகின்றனர்.
ஞானி என்பவன் எவரும் எளிதில் அணுக முடியாதவன் என்ற நிலையை மாற்றி அனைவரும் தன்னை அணுகும்படி வாழ்ந்தார்.
ஆத்ம விசாரணை செய்யும்முறையை தெளிவுபடுத்தினார்.
ஒருநாள் மகான் ரமணர் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக வந்தார்.
இருவரும் உரையாடுகிறார்கள். அந்த உரையாடல்.
நீங்கள் கடவுளைப் பார்திருக்கிறீர்களா?
ரமணர்: அதை ஏன் அறிய விரும்புகிறீர்கள்?
நீங்கள் கடவுளைப் பார்த்திருந்தால் நானும் அவரைக்காண தங்களிடம் உதவியை வேண்டுகிறேன்.
ரமணர்: நான் கடவுளைக் காண விரும்புகிறேன் என்கிறீர்கள்; முதலில் நீங்கள் யார்?
என் பெயர் தேவதத்த சர்மா
ரமணர்: இது உங்கள் பெயர்? நீங்கள் யார்?
நான் சர்மா என்று முன்னரே சொல்லிவிட்டேன். நான் ஒர் அந்தணர்.
ரமணர்: அது உங்கள் வேலை. நீங்கள் யார்?
நான் யார் என்று என்னால் சொல்ல இயலவில்லை.
ரமணர்: "நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியாத போது கடவுளை எவ்வாறு தெரிந்து கொள்வீர்கள்? கடவுளை அறிய வேண்டுமானால் முதலில் நீங்கள் யார் என்று அறிய வேண்டும் "
என்றார்
கிரிவலத்தினால அடையும் நன்மை என்ன எனக் கேட்ட பக்தருக்கு, “கிரிவலம் தீயைப் போன்றது. தன்னைத் தொட்டவரைத் தீ சுடுவதுபோல அது உன்னை ஈர்க்கும். நம்பிக்கை உண்டோ இல்லையோ, ஒருமுறை கிரிப்பிரதட்சணம் செய்துபார்; நீயே உணர்வாய்” என்றார். ரமணரின் இந்த கூற்றுக்குப் பிறகே கிரிவலம் பிரபலமானது.
பவுர்ணமியில் இன்று லட்சக்கணக்கானோர் வலம் வருகின்றனர். ‘உன்னை விசாரித்து அறி' என்பது அவரது சுருதி வாக்கியம்.
இருபதாம் நூற்றாண்டு மக்களுக்குத் தேவையான ஆன்மிகத்தை எளிமையாக உணரவைத்த ஞானி தனது ஸ்தூல உடலைவிட்டு ஜோதியாகி 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் இரவில் அருணைமலையில் கலந்தார்.
அந்த ஜோதியை பல்லாயிரக்கணக்கானோர் அதே இரவு வானில் கண்டதாகக் கூறினர்.
ரமணர் பெரிய பிரசங்கம் நிகழ்த்தியதில்லை.
தனக்கென சீடர் பட்டாளம் உருவாக்கவில்லை.
அவர் போதனை எல்லாம் அன்பான அருளுரையே!
#உபதேசங்கள்
ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம்.
ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம்.
உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம்.
இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.
(ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' நூலை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.)
ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது.
தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும்.
அதனைப் பயில்க.
தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.
#சகஜ_சமாதி
ஒருவன் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்கிறான்.
அப்போது அவனுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது.
மாடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
பல இடங்களைக் கடந்து செல்கின்றன. வழியிலே சோலைகளும் ஊர்களும் இருக்கின்றன.
அவற்றின் வழியே வண்டி செல்கிறது. வண்டி செல்வதனால் அதற்கும் தூங்கும் மனிதனும் அந்த வழியிலே சென்றவன் ஆகிறான்.
வண்டி ஓரிடத்தில் நிற்கிறது.
சிறிது நேரம் கழித்து வண்டியில் இருப்பவன் விழித்துக்கொள்கிறான்.
அதற்கு முன் அவன் கடந்த வழி அவனுக்குத் தெரியாது.
அங்கிருந்த காட்சிகளையும் அவன் அறியான்.
ஆனாலும் அவன் அத்தனைக் காட்சிகளையும் கடந்தே வந்திருக்கிறான்.
சகஜ சமாதியில் இருக்கும் ஆத்ம ஞானி உலகில் வாழ்ந்தாலும் அதில் ஈடுபடாமல் அதனால் வேறுபாடு அடையாமல் இருக்கிறான்.
இதுபோன்ற பல உபதேசங்களை வழங்கியவர் ரமண மகரிஷி.
திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து வேறெங்கும் செல்லாமல் மக்களைத் தான் இருக்கும் இடத்திற்கு தன் தெய்வீக ஒளியால் வரவழைத்து தன் பக்தர்களாக்கிய பெருமை ரமண மகரிஷிக்கே உரியதாகும்.
நம்முடைய தலைமுறைக் காலத்திலேயே ஒரு சாதாரண மனிதராக அவதரித்து, பின்பு தன் முயற்சியாலும், பூர்வஜென்ம பலத்தாலும் தெய்வ நிலைய அடைந்தவர்.
அமைதியையும் ஆனந்தத்தையும் பரிபூரணமாக உணர்ந்தவர். தான் தெய்வ நிலைக்கு உயர்ந்துவிட்டதை வெளிப்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து மக்களுக்கு அருளுபதேசமும் நயன தீட்சையும் வழங்கிய ஞான வள்ளல் ரமணர்.
"எவர் முன்னிலையில் பரிபூரண அமைதி கிடைக்கிறதோ அவரே உன் குருவாவார்"
என்று கூறிய ரமணரின் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.
உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான்.
இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!...
[புகைப்படங்கள்;1,2,5-பகவான் ரமணர்,
3 தாயாருடன்,4 ரமணர் புகழை வெளிநாடுகளில் பரப்பிய பால் பிரண்டன்,6 ரமணர் சமாதி]
இது ஹிந்து தேசம் #இந்துத்துவம் {தொடர்}- {பாகம்-32}
கேரளா மாநிலம் ஆலவாய் என்னும் கிராமத்தில் இருந்து சுமார் ஆறு மைல் தூரத்தில் #காலடி என்கிற சிறிய கிராமத்தில் பிறக்கிறார்.
4 வயதில் தந்தையை இழக்கிறார்.
5 வயதில் கற்க ஆரம்பிக்கிறார்.
7 வயதிற்குள் அனைத்து தத்துவ நூல்களையும் கற்கிறார்!
8 வயதில் துறவியாகிறார்.#கேரளத்தை விட்டு வடக்கே #நர்மதை நதிக்கரையை அடைகிறார்.#கோவிந்தரை குருவாக அடைகிறார்..
12 வயதில் #காசிக்கு செல்கிறார்.
கடும் தவம் புரிந்து யோகத்தின் உயர்ந்த நிலையான "
#நிர்விகல்ப_சமாதிநிலை யை" அடைகிறார்.அத்வைதம்"என்ற தத்துவத்தை வெளிப் படுத்துகிறார்.காசியில் பல தத்துவ நூல்களை படைக்கிறார்.
#இந்து மதத்தை 6 பிரிவுகளாக ஒருங்கிணைக்கிறார்.
(அவை
1.கணபத்தியம்-விநாயகர் வழிபாடு
2.கௌமாரம்-முருக வழிபாடு
3.சைவம்-சிவ வழிபாடு
4.வைணவம்-விஷ்ணு வழிபாடு
5.சாக்தம்-சக்தி வழிபாடு
6.சௌரம்- சூரிய வழிபாடு)
#இந்தியா முழுவதும் சென்று தன் தத்துவத்தை பரப்புகிறார்.
செல்லும் வழியில் அனைத்து மத அறிஞர்களையும் வாதத்தில் வெல்கிறார்.
பல சீடர்களைப் பெறுகிறார் .கூடுவிட்டு கூடு பாய்தல் போன்ற பல அற்புதங்களை நிகழ்த்துகிறார்.
வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, தெற்கே சிருங்கேரி. ஆகிய 4 இடங்களில் மடங்களை நிறுவுகிறார்.
தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற திரும்பி வந்து தாய்க்கு இறுதிசடங்கு செய்கிறார்.
பிறகு மீண்டும் வட இந்தியா செல்கிறார்.
#இமயமலை சென்று அங்கு ஒரு குகையில் யோகநிலையில் 32 வயதில் தன் உடலை விடுகிறார்.
அவரே "உலகமே வியக்கும் "#அத்வைதம்" என்ற தத்துவத்தை வெளிப்படுத்திய #ஆதிசங்கரர்.
இந்து மத பிரிவுகளையும்,தத்துவங்களையும் ஒருங்கிணைத்து இந்து மதத்தின் சிற்பி என அழைக்கப் படுபவர்.
32 வயது (788-820)வரை மட்டுமே வாழ்ந்த அவரது தத்துவ நூல்களையும் சாதனைகளையும் இன்றும் உலகம் வியக்கிறது!
.உலக விஞ்ஞானிகளில் முதல் இடத்தைப் பிடித்த #ஐன்ஸ்டீன் படைத்த #சார்பியல்_தத்துவம்(theory of relativity)சங்கரின் அத்வைத தத்துவத்தை (குறிப்பாக அவரது #மாயா தத்துவத்தை) அறிவியல் முறையில் நிறுவுகிறது.
#குவாண்டம்_இயக்கவியல் கூறுவதும் சங்கரரின் அத்வைதம் என்ற தத்துவமே.
வேதங்களின் மூலக் கருத்தே சங்கரர் வெளிப்படுத்திய"அத்வைதம்" என்ற தத்துவமாகும்.
நண்பர்களே! கீழே ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தின் கொள்கை சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.படித்துப்பாருங்கள்
எங்கும் நிறைந்த #இறைவன்_நானே!.
இந்தப் #பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே! அனைத்தும் நானே! வேறாகத் தெரிவது மாயை.மனத்தின் கற்பனையே!.."#நானே_கடவுள்!
நானே கடவுள் என்பதை உணராமல் வாழ்வது #மாயை!
என்பதே அத்வைத தத்துவமாகும்.
மாயை என்பது என்ன?
#மாயத்_தோற்றம் என்பது எளிமையான பொருள். இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது என்றும் சொல்லலாம்.
மாயையை இரண்டு விதமாகப் பிரிக்கிறது #அத்வைத_தரிசனம்.
ஒன்று ஆவரணம்.-உள்ளதை மறைப்பது
இரண்டு விக்ஷேபம். -இல்லாததைத் தோற்றுவிப்பது
ஆகியவையே இவை.
நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் கடவுளாகிய நானே!. என்னைத் தவிர இரண்டாவதாக ஒன்றில்லை.
. மனிதர்கள், மரங்கள், விலங்குகள், புல் பூண்டுகள்ஆகிய அனைத்து உயிர்களும் அண்ட சராசரங்கள் ஆகிய யாவும் இறைவனாகிய நானே!.
இதை வேறாகக் காட்டுவது மாயை.
.இருப்பது இறைவனாகிய நாம் மட்டுமே.மாயை இதை மறைக்கிறது
இல்லாதது உலகம். மாயை இதைத் தோற்றுவிக்கிறது.
மாயையைக் கடந்தால் பொய்யான இந்த உலகம் மறைந்து மெய்யான இறைவன் நானே என்ற உண்மை விளங்கும்.
நாமும் கடவுளும் வேறு என்று நினைத்த மாய எண்ணமும் மறைந்துபோகும்.
கடவுளாகிய தன்னை உணராமல் வேறு எங்கோ கடவுளை மனிதன் தேடுகிறான்.
மனிதன் படைத்த அத்தனை கடவுள்களும்,சொர்க்கம்,நரகம் போன்ற அனைத்தும் மாயை!.
முன்னோர்களும்,சமுதாயமும் படைத்த சாதி, மதம்,இனம்,மொழி,தேசம்,போன்ற அனைத்து வேற்றுமைகளும் மாயையே.
பிறப்பு,இறப்பு,இன்பம், துன்பம், வெற்றி தோல்வி ,லாபம், நஷ்டம், புகழ் ,இகழ்ச்சி ஆகிய அனைத்தும் மாயையே!
மேலே கூறப்பட்ட அத்தனை வேறுபாடுகளும் மனித மனத்தின் கற்பனையே! மாயையே!.
.உள்ளது கடவுளாகிய நாம் மட்டுமே!
பகுத்தறிவின் மூலம் நான் யார்? என்பதை ஆராய்ச்சி செய்தால் இந்த உண்மையை உணரலாம்.
அத்வைத தத்துவத்தின் "#மாயா" கொள்கை
"நாம் இறைவன் என்பதே உண்மை.நாம் காணும் உலகமும் பொருட்களும் எல்லாமே பாலைவனத்தில் தோன்றும் #காணல்_நீர் போல ,#கனவில் காணும் பொருள் போல ஒரு பொய் தோற்றமே! இந்த உண்மை நமக்குத் தெரியவில்லை .அதற்கு காரணம் மாயை என்கிறது அத்வைத தத்துவம்.
மாயை என்றால் என்ன? மாயத் தோற்றம் என்பது எளிமையான பொருள். இல்லாததை இருப்பதாக நினைத்தும் இருப்பதை இல்லாததாகவும் மயங்குவது என்று பொருள்.
எப்படி எல்லாமே பொய்யாக இருக்க முடியும்?
இருட்டில் ஒரு பாம்பைப் பார்க்கிறீர்கள். அச்சம் ஏற்படுகிறது. அடுத்த நிமிடமே அது #கயிறு என்று தெரிந்துவிடுகிறது. அப்போது அங்கே #பாம்பு மறைந்து விடுகிறது அல்லவா?
அதுபோலத்தான் எங்கும் இருப்பது இறைவனே என்று உணர்ந்தால் உலகம் மறைந்துவிடும் என்கிறது #அத்வைதம்.
ஒரு #குடம் இருக்கிறது. அதற்குள்ளும் #ஆகாசம் இருக்கிறது. அதற்கு வெளியிலும் ஆகாசம் இருக்கிறது.
குடத்தின் #ஓடு உடைந்தால் வெளியில் உள்ள ஆகாசமும் உள்ளே இருக்கும் ஆகாசமும் ஒன்றாகிவிடுகின்றன அல்லவா? அந்த ஓட்டைப் போன்றதுதான் மாயை.
பெரிய பணக்காரர் ஒருவர் தூங்கும்போது பிச்சை எடுப்பதுபோலக் கனவு காண்கிறார். பசியால் அழுகிறார். வேறொருவர் மலையிலிருந்து கீழே விழுவதுபோலக் கனவு காண்கிறார்.
#கனவு காணும்போது அது நிஜம்போல இருக்கிறது. #வேதனை, #அச்சம் எல்லாமே நிஜமாக இருக்கின்றன. விழித்த பிறகு அது பொய் என்று தெரிகிறது. அதுபோலத்தான் மாயை விலகியதும் உண்மை புரிகிறது.
ஆழத்தில் #மறைந்திருக்கும் உண்மையை உணர்ந்ததும் மேற்பரப்பில் #தோற்றமளிக்கும் உண்மை மறைந்துவிடுகிறது.
மேற்பரப்பில் இருப்பது மாயை. கீழே இருப்பது கயிறுதான், பாம்பு அல்ல என்று உணருவதுபோல, மேற்பரப்பில் தெரிவது பொய் என்பதை அறிந்தால் பிரம்மமே நித்திய சத்தியம் எனபதையும் நாமே #பிரம்மம் என்பதையும் உணரலாம் என்பதே #அத்வைத_தத்துவ_தரிசனம்.
(எங்கும் நிறைந்த உருவமில்லா இறைத்தன்மையே பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது)
பாம்பாகத் தெரியும் கயிறை உணர அறிவும் #விழிப்புணர்வு தேவை. உலகமாகத் தெரியும் இறைவனை உணர #பகுத்தறிவு தேவை.
உண்மையான பகுத்தறிவின் மூலம் #நித்தியமான சத்தியத்தை உணரலாம் என்கிறது அத்வைதம்.
மாயை எப்படி வந்தது, ஏன் வந்தது? எப்போது வந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.
மாயை #அறியாமையால்(அஞ்ஞானத்தால்) வந்தது. என்று அத்வைத ஞானிகள் சொல்கிறார்கள்.
#அறியாமை எப்படி வந்தது? மாயையால் வந்தது. சொல்லப்போனால் அறியாமையும் மாயையும் பிரிக்க முடியாத அளவில் ஒன்றுடன் ஒன்று கலந்தவை.
ஒன்றை ஒன்று உருவாக்குபவை. ஒன்று இருக்கும்வரை மற்றொன்றும் இருக்கும். ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லாமல்போகும்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை.
விதை காரணம், மரம் காரியம்.
அடி காரணம், வலி காரியம்.
அப்படியானால் மாயையின் காரணம் என்ன?
காரண – காரிய விதியே மாயையின் உருவாக்கம்தான். எனவே மாயை ஏன் வந்தது என்னும் கேள்வியிலும் பொருள் இல்லை
காலமே மாயையின் கருவி
இந்த மாயை எப்போது வந்தது?
இதற்குப் பதில் சொல்ல முடியாது என்கிறது அத்வைதம்.
எப்போது என்பது காலத்தைக் குறிக்கிறது.
#காலம் என்பதே கற்பிதம்.
காலமே மாயையின் கருவி.
மாயைதான் காலத்தை உருவாக்கியது.
நேற்று, இன்று, நாளை என்பதெல்லாம் மாயை.
எனவே மாயை எப்போது தோன்றியது என்னும் கேள்விக்கே இடமில்லை.
மாயை உருவான பிறகே காலம் உருவானது.
மாயை விலகினால் காலமும் விலகும்.
எனவே எப்போது என்னும் கேள்வியே அர்த்தமற்றது.
அறியாமையைப் போக்கத் தூய அறிவு, ஞானம் தேவை. அது வந்துவிட்டால் அறியாமையும் மாயையும் விலகும். அதுதான் உண்மையான விடுதலை .
இறைவன்(பிரம்மம்) மட்டுமே உள்ளது.
என்றும் அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது மனிதனின் அறியாமை என்றும் ஆதிசங்கரர் சொல்கிறார்.
புறவுலகம் (இறைவன்)பிரம்மம்தான். ஆனால் அதில் நாம் காணும் தோற்றங்கள், குணங்கள் ஆகியவை பொய்த் தோற்றங்களே!
தூய ஞானத்தில் உதவியால் இந்தத் தோற்றங்களை விலக்கினால் அறிபவன், அறிபொருள், அறிவு ஆகிய எல்லாமே ஒன்றாகிவிடுகின்றன.
மூன்றையும் பிரித்துக் காட்டுவது மாயை. மாயையை ஞானத்தால் கடந்தால் உணரப்படுவது ஒருமை.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுதான்.அது
#இறைவனான_நாமே! வேறுபாடுகள் மேலோட்டமானவை, தற்காலிகமானவை.இதைஉணர்ந்தவர்கள் மரணத்தை வென்று சாகா நிலை அடைவார்கள்!
(தொடரும்)

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

குறைந்த  முதல்லீட்டில்  நிறைந்த இலாபம் சம்பாதிக்க மேல்கண்ட  பொருள்களை  மார்கட்டிங் செய்ய 
தொடர்புகொள்க அசோக்   8012042089 8015463999

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

எபிடஸ் என்ற கிரேக்க அறிஞர் சூழ்நிலைகள் மனிதர்களை உருவாக்குவது அல்ல. மாறாக தான் யார், எவ்வாறு நிகழ்வுகளை எதிர்கொள்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் காரணியே என்று கூறுகிறார். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான சூழ்நிலைகளில் பல்வேறு வகையான நிகழ்வுகளை சந்திக்கின்றோம். சாதாரணமான நிகழ்வுகளை எளிதானவை என்று சொல்லி எதிர்கொள்கின்றோம். சிக்கலான நெருக்கடியான நிகழ்வுகளை எதிர்கொள்ள பெரிதும் அஞ்சுகின்றோம்.
ஆனால் அது போன்ற சிக்கலான, நெருக்கடியான நிகழ்வுகளை எதிர்கொள்ளுவது எப்படி என்பதை பற்றி பிரையின் டிரேசி என்பவர் தன்னுடைய நான்காவது புத்தகத்தில் எடுத்து கூறுகிறார். Focal point, Eat That Frog and Create Your Own Future உள்ளிட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.
வாழ்விலும், வியாபாரத்திலும் திட்டமிட்ட நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்கின்றன. எந்த அளவு கீழே விழுவோம் என்பதை விட எந்த அளவு விரைவாக மேலே எழுவோம் என்பது தான் முக்கியம். நெருக்கடியான நேரங்களில் வெற்றிபெறுவது எப்படி என்பதை எடுத்துரைக்கும் இந்தப் புத்தகம், நடைமுறை உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது பற்றி வேகமாகவும், முடிவாகவும், முழுமையாகவும் தெரிவிக்கிறது.
ஆர்னால்ட் டாயின்பி என்ற வரலாற்று ஆசிரியர் 3000 ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து கூறியுள்ளார். அந்த கூற்றுகள் ஒவ்வொரு தனிநபரின் வாழ்விலும் ஏற்புடையதாகும். வியாபாரத்திலும் இது போன்றே எதிர்பாராத மாற்றங்களும், ஆக்கிரமிப்புகளும் நிகழ்கின்றன. இது போன்ற நேரங்களில் தலைவர்களாக இருப்பவர்கள் சரியான முடிவு மற்றும் நடவடிக்கை இவற்றின் மூலமாக எதிரிகளை வென்று தங்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள்.
இதற்கு மங்கோலிய சாம்ராஜ்யம் சரியான எடுத்துக்காட்டாகும். விடாமுயற்சியை போல வெற்றிக்கு வித்திடும் குணாதிசயம் வேறு ஏதும் இல்லை, விடாமுயற்சி தன்னம்பிக்கையை வளர்க்கும், தன்னம்பிக்கை இலக்கை அடைய வழிகாட்டும்.
உணர்வுகளை கட்டுப்படுத்தி சரியான கேள்விகள் கேட்பதன் மூலம் தீர்வுகள் காண வேண்டுமே தவிர உணர்வு பூர்வமாக ஒரு தீர்வை அடைய முடியும் என நம்புவர்கள் கானல் நீரை அடைய முயற்சிப்பதற்கு சமமாகும் என்கிறார்.
ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு மோசமான முடிவும் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகளை ஏற்றுக் கொண்டு அவை நிகழாவண்ணம் செயல்படவேண்டும். வெற்றியும் தோல்வியும் தொடர்ச்சியாக நிகழ்வன அல்ல. மாறி மாறி நடக்கும்போது வேறு வேறு விளைவுகள் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
நடந்ததை எண்ணி அவைகளை மேற்கோள் காட்டி பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.நூறு விழுக்காடு எந்த ஒரு பிரச்சினையையும் எதிர்கொண்டு அடுத்தவரை குறை கூறாமல் நிகழ்வுகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
‘கவிழ்ந்த பால் கலயம் ஏறாது’, ‘இழப்பதற்கு இனி எதுவும் இல்லை’ என்ற மனப்பான்மை இருந்தால், எந்த சூழலிலும் நமக்கு தேவை இல்லை என்றால் விட்டு விலகுதலே சரியாகும்.
நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது ஒரே ஒரு வழிதான் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும் அந்த பிரச்சினைக்கு எந்த அளவு விதவிதமான வித்தியாசமான தீர்வுகள் இருக்கும் என்பதை உணர வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல் நன்று. ஏனென்றால் எந்த ஒரு இடத்துக்கும் நிச்சயமாக மாற்று வழி இருந்தே ஆக வேண்டும்.
பரேடோ என்ற இத்தாலிய பொருளாதார விஞ்ஞானி 80 சதவிகித செல்வம், 20 சதவிகிதம் மனிதர்களிடம் இருப்பதாக ஒரு கருதுகோளை நிறுவினார். இந்த கருதுகோள் பலவகைகளிலும் 80:20 என்ற பாணியில் கையாளப்பட்டது. அதை போலவே 80 விழுக்காடு செயல்கள் 20 விழுக்காடு நடவடிக்கையில் இருந்து வரும் என்று சிலர் விளக்கினார்கள்.
நம்மில் சிலர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக, அதை இடியாப்ப சிக்கலாக்குவதில் மிக தீவிரமாக இருப்பார்கள். பிரச்சினைகளுக்கு சாதாரண தீர்வுகள் உண்டு. ஆனால் சாதாரண தீர்வுகள் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தீர்க்க உதவாது. இந்த எண்ணத்தில் பிரச்சினைகளை சிக்கலாக்குபவர்களே அதிகம். எனவே எந்த பிரச்சினையையும் அளவுக்கு அதிகமான கற்பனை செய்து அதனால் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பது இன்றியமையாதது ஆகும்.
உள்மனதின் கருத்துகள் பெரும்பான்மையான நேரங்களில் கேட்கப்படுவதில்லை. மாறாக ஆழ் மனதில் தோன்றும் சிறிய கருத்து செறிவையும் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் கருத்துச் செறிவுகள் நெருக்கடிகளை நேர்காண உற்ற துணையாக இருந்து உதவும்.
ஆண்டவர் நல்லவர்களை மட்டுமே அதிகம் சோதிப்பார் என்று அக்கம் பக்கத்தில் பேசும் செய்தியை நாம் புறம் தள்ளுகின்றோம். ஆனால் அதில் உள்ள கருத்து ஒழுக்கமும், சிறந்த குணமும் எதையும் எதிர்கொள்ள உதவும் என்பதே ஆகும். எனவே, ஒழுக்கமும், சிறந்த குணமும் நெருக்கடி நேரங்களில் அவற்றை அதிரடியாக தீர்க்க உதவுகின்றன.
வெல்லும்வரை விடக்கூடாது என்ற மனப்பாங்கு வெகுவானவர்களிடம் இருப்பதில்லை. இன்னும் சிறிது தூரம் மேலே ஏறி இருந்தால் பள்ளத்தில் இருந்து நிலப்பரப்புக்கு வந்து விடலாம். ஆனால், அந்த கடைசி நான்கு அல்லது ஐந்து அடி உயரம் ஏறுவதில் மனம் தளரும்போது நிலப்பரப்பை அடைவது கனவாக முடிகிறது. ஆக வெல்லும் வரை விடக்கூடாது என்பது நெருக்கடிப் பணியை உருகச் செய்யும் மனப்பாங்காகும்.
பலம் மற்றும் பலவீனம் என்பது இரு கூறுகளாக மனிதர்களை பிரிக்கின்றது. பலம் என்பது ஒருவர் விடாப்பிடியாய் ஒரு கருத்தை ஏற்பது. பலவீனம் என்பது ஒரு கருத்தை தயக்கத்துடனும், தடுமாற்றத்துடனும், அற்ப காரணங்களுக்காகவும் தவிர்த்து பிரச்சினைகளில் மூழ்கிவிடுதல் ஆகும்.
எதை, எப்பொழுது, எங்கே, எவ்வாறு சரியாக செய்வது என்பதில் தான் வெற்றியின் சூட்சமம் அடங்கி உள்ளது. அவ்வாறு செய்பவர்கள் நெருக்கடிகளை நேர்கொண்டு பஞ்சாக ஊதிவிடுவார்கள்.
முயற்சி இல்லாத லாபம், பயம் இல்லாத அனுபவம், வெகுமதி இல்லாத வேலை இவை அனைத்தும் பிறக்காமலே வாழ்வதற்கு ஒப்பாகும். இது மிகைப்படுத்தபட்ட கூற்று அல்ல.
மேலே கூறிய இந்த கருத்துகளை பிரையின் டிரேசி, ஒருவர் எவ்வாறு நெருக்கடிகளை நேர்கொண்டு, பிரச்சி னைகளை எதிர்கொண்டு தொடர்ந்து போராடி அவைகளை கட்டுக்குள் கொண்டுவருவது என்பதை பற்றி விளக்கமாக கூறியுள்ளார். இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சில கருத்துகள் ஏதோ நாம் பேருந்திலோ அல்லது தொடர் வண்டியிலோ பயணிக்கும் சக பிரயாணியை பார்ப்பது போல அமைந்துள்ளது. இந்த புத்தகத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். நம்பினோர் நெருக்கடி தீர்ப்பார், நம்பாதவர் நெருக்கடியில் நீச்சலடிப்பர்.
இந்த புத்தகத்தை படிக்க நினைப்பவர்கள் நெருக்கடிகளை நேர்கொள்ளலாம். படிக்காதவர்கள் நெருக்கடிகளோடு வாழலாம். மேலதி கமான கருத்துக்களை சாதாரணமாக நடைபெறும் விஷயங்களை போல எளிதாக எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு.
rvenkatapathy@rediffmail.com

புதன், 27 ஆகஸ்ட், 2014

நவக்கிரகங்களும் உயிர்கள் வளர்ச்சியும்;ஜோதிடம்


சூரியன் சந்திரன் இல்லாவிட்டால் உலகில் மனித வர்க்கமே தோன்றி இருக்காது..மற்ற எந்த ஜீவராசிகளும்,தாவரங்களும் தோன்றி இருக்கவும் நியாயமில்லை.சூரிய
சந்திரனால் எல்லாம் உயிர் பெற்று வளர்கின்றன..வாழ்கின்றன..இவ்விரண்டு கோள்கள் போல மற்ற கிரகங்களும் தனக்கென தனித்தன்மை பெற்றிருக்கின்றன...இக்கோள்களின் மொத்த ஒளிக்கதிர்கள் ஒன்றாக சேர்ந்து பூமியில் விழும்போது மனிதனின் குணங்களில் ,ஜீவராசிகளின் குணங்களில் வாழ்க்கை முறையில் நிறைய மாறுதல்கள் உண்டாகின்றன...மனிதன் வாழ பலவித தேவைகள் பூர்த்தியாகின்றன...

பூமிக்கு ஆக்ர்ஷ்ண சக்தி இருப்பதால் சுமார் இரண்டு கிலோ மீட்டர்களுக்குண்டான எதையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும்.இந்த சக்தி மற்ற எந்த கோளுக்கும் இல்லை..இதனால்தான் பூமியை தவிர எங்கும் ஜீவராசிகள் வாழ வாய்ப்பில்லை என அக்கால நம் முனிவர்களும் ,சித்தர்களும் சொல்லிவிட்டு சென்றனர்.இக்கால விஞ்ஞானிகளும் அது உண்மை என ஒப்புக்கொள்கின்றனர்.

 மனித உடல் வளர்ச்சியில் தலை முதல் மார்பு வரையிலுள்ள மேல் பகுதியை கிரக மண்டலத்தின் இளவரசனான சூரியன் வளர்க்கிறான் என்கிறது ஜோதிடம்.அதுபோலவே சந்திரன் முகத்தையும் ,செவ்வய் மார்பையும் ,புதன் இடையையும் முதுகையும்,வயிற்றை குருவும்,கைகளை ராகுவும் கால்களை கேதுவும் வளர்க்கின்றனர் என ஜோதிடம் சொல்கிறது.ஜாதகத்தில் எந்த கிரகம் வலு குன்றி இருக்கிறதோ அதர்குறிய உடல் பாகங்கள் அழகில்லாமலோ ,வளர்ச்சி இல்லாமலோ,பாதிக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது!!

புதன், 6 ஆகஸ்ட், 2014

                         வல்லரசை நோக்கி இந்தியா

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.  இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

74.3 சதவீதம்

அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர்.  இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இது 3 மடங்கு அதிகமாகும்.  அவர்களில் நகர்ப்புறங்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் மிக இளம் வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மனநல பாதிப்பு
இந்த ஆய்விற்காக வடக்கு கோவாவை சேர்ந்த 20-49 வயது உடைய 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.  இவர்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் அடங்குவர்.  அவர்களிடம், மதுபானத்தை எந்த வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?, எவ்வளவு மதுபானம் எடுத்து கொண்டீர்கள்? மற்றும் குடிப்பதால் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

அவர்களின் மனநல பாதிப்பு குறித்தும் தகுதி வாய்ந்த நபரால் ஆய்வின்போது கணிக்கப்பட்டன.  இளம் வயதில் குடிக்க தொடங்காதவர்களை காட்டிலும், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு மற்றும் மதுபானத்திற்கு அடிமையாவது என்பது இளைஞர்களிடையே இரு மடங்காக உள்ளது.  அவர்கள் குடிப்பதன் காரணமாக 3 மடங்கு காயம் அடைந்து உள்ளனர்.

இளம் வயதில் குடிக்க தொடங்குவதால் வாழ்நாளில் அது தொடர்பான காயங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இருந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இந்த முடிவுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட இந்தியா போன்ற நாடுகளிலும் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஆய்வு குறித்து அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான கலாசாரம்
இந்த ஆய்வு முடிவின்படி, இளம் வயதில் மதுபானம் குடிக்க தொடங்குவதால் வாழ்நாள் முழுவதும் அதனை சார்ந்து இருக்கும் சூழல் அதிகமாக உருவாகிறது.  குடிப்பதால் ஏற்படும் துன்பம், மதுபானம் தொடர்பால் ஏற்படும் காயங்கள் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் வயதான காலத்தில் அதிகரிக்கின்றன என்பதும் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மதுபான நுகர்வு ம்ற்றும் அதனால் ஏற்படும் தீங்கு தரும் விளைவுகள் ஆகியவை இந்தியாவில் மிக பெரும் பொது சுகாதார பிரச்சனையாக விளங்குவதுடன் இந்த கலாசாரம் ஆபத்தை உணர்த்துவதாகவும் உள்ளது என ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகள், இளம் வயதில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது.  மேலும், இளம் வயதில் மதுபானம் குடிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும் வலியுறுத்துகிறது.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் தெரியுமா?






ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்றவற்றிற்கு நல்லது மற்றும் கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் ருத்ராட்சம் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் மகத்துவம்:

ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும்.

ஒரு முக ருத்ராட்சத்தின் மகத்துவம்:


ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம்.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.

மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும், கோபத்தீயும் விலகும்.

எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.

பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும், பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.