திங்கள், 27 ஜனவரி, 2014

மெகா ஃபிக்ஸில்ஸ் என்றால் என்ன ?

hasselbladh5d
MP அதாவது Mega Pixels மெகா ஃபிக்ஸில்ஸ் என்ற வார்த்தையை தற்காலத்தில் அடிக்கடி கேட்டு வருகிறோம். முக்கியமாக  டிஜிட்டல் கேமேரா  வரவால் இவ்வார்த்தை சாமானியனிர்களிடமும் மிகவும் பிரபலமாகிவிட்டது.
MP அதாவது Mega Pixels (மெகா ஃபிக்ஸில்ஸ் ) என்றால் என்ன ? 
ஒரு பிக்சல் என்பது  கணினி மானிட்டர் அல்லது  (டிஜிட்டல் ஸ்க்ரீனில்) காட்சித்திரையில் தெரியும்  காட்சியில்  ஒரு சிறிய சதுர  புள்ளி ஆகும். இவ்வகை திரைகளை ஒரு உருப்பெருக்கி கண்ணாடி மூலம் நோக்கினால் அப்புள்ளிகளை நாம் எளிதாக காணலாம். ஸ்க்ரீனில் புள்ளிகள் அதிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தால்  காட்சி அல்லது படம் மிக தெளிவாக தெரியும்.
images
Image courtesy: ccideas.com
இதை நாம் உபயோகிக்கும் செல் போன்களில் தெளிவாக பார்க்கலாம். அதாவது விலை குறைந்த செல்போன் ஸ்க்ரீனில் இந்த கட்டங்கள்  சாதாரண கண்களுக்கே தெளிவாக தெரியும். அதே வேளையில் மிக விலை உயர்ந்த போன்களின் டிஸ்ப்ளேக்களில் இந்த புள்ளிகள் சாதாரண் கண்களுக்கு புலப்படாது. ஆனால் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை வைத்து பார்த்தீர்களானால் பிக்சல் எனப்படும் புள்ளிகளை காணலாம். அதாவது ஃபிக்ஸில் எனப்படும் அப்புள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க காட்சி அல்லது படம் பளிச்சென்றும் அதிக கவர்ச்சியுடனும் தெரிய ஆரம்பிக்கிறது.
nokia-1650-basic-mobile-phone20100630114434!Sony_Ericsson_W995
எனவே நாம் வாங்கும் டிஜிட்டல் கேமராக்களில் ஃபிக்ஸில்கள் அதிகமாக இருப்பின் படங்கள் தெளிவாக இருக்கும். (ஆனால் படத்தின் தரத்தை நிர்ணயம் செய்வதில் இதை மட்டுமே கணக்கில் கொள்ள இயலாது இதோடு சேர்ந்து பிற டெக்னிகல் விஷயங்களும் சேர்ந்துதான் கேமராவின் தரத்தை நிர்ணயிக்கும். எனவே மெகா ஃபிக்ஸில் அதிகம் இருந்தால் அது சிறந்த கேமரா என்று உடனே முடிவு செய்து விட வேண்டாம்.)
ஒரு மில்லியன்  ஃபிக்ஸில்கள்  ஒரு மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கப்படுகிறது.  உதாரணத்திற்கு 3.1 மெகா ஃபிக்ஸில் கேமராவில்  2048 x 1536 புள்ளிகள் கொண்ட போட்டோவை எடுக்கலாம். அதன் மொத்த புள்ளிகள் 3,145,728 ஃபிக்ஸில் ஆகும். இந்த அளவே 3.1 மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கபடுகிறது.
தொழில் நுட்பம் வளர வளர அதிக மெகா ஃபிக்ஸில்கள் கொண்ட கேமரா உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சாதாரண பயன்பாட்டிற்க்காக  அதிகபட்சமாக 120 MP கேமரா மார்க்கட்டில் கிடைக்கிறது.  இதன் விலை சுமார் 37,000 அமெரிக்க டாலர்களாகும். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 570 மெகா ஃபிக்ஸில் கொண்ட   Fermilab’s digital camera தான் உலகின் மிக அதிக அளவு மெகா ஃபிக்ஸில் கேமராவாகும்.
8477675926_9a55b1d5cb
500x_st_darkenergy_camera_f
570 மெகா ஃபிக்ஸில்ஸ் கேமரா

வெள்ளி, 24 ஜனவரி, 2014

எப்படியலம்  யோசிக்கரங்கபா 

நீங்கள் அதிகம் நாவல் கதை கவிதை எழுதுபவரா.. அப்படின்னா இதைப் படியுங்க..!

கிரியேற்றிவிற்றிக்கும் (சுய படைப்பாற்றல்) சில மூளை சம்பந்தப்பட்ட மனநோய்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலை இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்களாம் சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள்.

அதாவது அதிகம் கதை.. நாவல்.. கவிதை என்று கற்பனையில் புனைவுலகில் அதிகம் வாழ்க்கை நடத்துவோர் மத்தியில் இந்த மனநோய்கள் ஏற்படுவதற்கான அல்லது காணப்படுவதற்கான வாய்ப்பு (risk) அதிகம் என்று அறியப்பட்டுள்ளது.

அதேபோல் இவர்கள் மத்தியில் தற்கொலைக்கான வாய்ப்பு சாதாரணமானவர்களைக் காட்டிலும் இரு மடங்காக உள்ளதாம்.

அதேபோல்.. அதிகம் நடனம் ஆடுவோர்.. படப்பிடிப்பு கலைஞர்கள் இவர்களிடமும் இந்த நிலை காணப்படுகிறதாம்.

அதற்காக கிரியேற்றிவிற்றி வகுப்புக்குள் அடங்கும் எல்லோருக்கும் மனநோய் வரும் என்பது அர்த்தமல்ல. அவர்கள் மத்தியில் மனநோய்க்கான வாய்ப்புத் தான் அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள்..!

கவிஞர் கண்ணதாசனும் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். பாரதியாரும் ஒரு போக்கு என்று சொல்கிறார்கள்..!

அப்ப பார்க்கப் போனால்.. அழகை ரசிப்பதும்.. ஒன்றில் ஆழமாக ஈடுபாடு காட்டுவதும் மனநோய்க்கு வழிவகுக்கும் என்று நாளை அறிவித்தால் ஆச்சரியப்படத் தேவையில்லைப் போலும்..!

Creativity 'closely entwined with mental illness'

Posted Image

Novelist Virginia Woolf killed herself

Creativity is often part of a mental illness, with writers particularly susceptible, according to a study of more than a million people.

Writers had a higher risk of anxiety and bipolar disorders, schizophrenia, unipolar depression, and substance abuse, the Swedish researchers at the Karolinska Institute found.

They were almost twice as likely as the general population to kill themselves.

The dancers and photographers were also more likely to have bipolar disorder.

As a group, those in the creative professions were no more likely to suffer from psychiatric disorders than other people.

But they were more likely to have a close relative with a disorder, including anorexia and, to some extent, autism, the Journal of Psychiatric Research reports.

வெள்ளி, 17 ஜனவரி, 2014

நட்புக்குத் துரோகம் !                                                                               உபயம்  தமிழ் சிறுகதை
சிறுகதை   

ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன.

நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.

ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக தன் இருப்பிடத்தை விட்டு கழுதை இருக்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், அந்தப் பக்கமாக சென்ற சிங்கத்தைக் கண்டு நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.

ஒரு வழி நரிக்குப் புலப்பட்டது. அதாவது, தன் நண்பன் கழுதையைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தான் தப்பித்துக் கொள்வது என்பதுதான் அந்த வழி.

நரி உடனே சிங்கத்தை நோக்கி, ""மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!'' என்று கூறிற்று.

அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.

நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.

""நண்பனே! இரை தேடச் செல்லலாமா?'' என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.

கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.

நரி பதறிப் போய், ""மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!'' என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.

""நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே,

உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது,'' என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.

இதற்குத்தான் கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.

புதன், 15 ஜனவரி, 2014

                               உலகமும்  இந்தியாவும் 

1. ஞான முத்திரை : அறிவு முத்திரை


முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். 

நேர அளவு: இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம். 
பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.
ஆகவே இந்த முத்திரை,
• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.
• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.
• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

                     பொங்கல் வாழ்த்துகள் 

தேனினும்  இனிய செங்கரும்பாய் 
      திகட்டாத வெள்ளம்முமாய் 
வானத்து செங்கதிரை வாஞ்சையுடன் 
      வணங்கி நித்தமும் பார்த்தாலும் 
நினைபதட்கு ஒருநாளாய்  முன்னோர் 
      வகுத்த திருநாள்தான் தை திருநாள் 
முற்றத்தில்  மூவரையும் உள்ளத்தில் 
   ஏற்றி இலத்தில் அழைத்து 
உற்றாரும் உறவினரும் ஒன்றி 
   பால் பழம் வெள்ளம் தேன் கலந்த 
  பொங்கல் படைத்தது கொண்டாடும் 
       உள்ளத்தில் இனிக்கட்டும்